Sunday, July 10, 2011

போலி வாக்குறுதியளிப்பதை, கல்வி உயர்கல்வி அதிகாரிகள் தமது பழக்கமாக கொண்டுள்ளனர்

பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அந்த பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தவறியுள்ளதாக சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி மஹிம் மென்டிஸ் தெரிவித்ததுள்ளார்.அத்துடன் போலி வாக்குறுதியளிப்பதை, கல்வி உயர்கல்வி அதிகாரிகள் தமது பழக்கமாக கொண்டுள்ளார்கள் என பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளதுடன் விரிவுரையாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை விரைவில் திரைசேரியிடம் சமர்பிக்க உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தவறான கருத்துக்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றாமல் நாட்டின் புத்திஜீவிகளான பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க உயர் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com