Monday, July 11, 2011

கடனட்டை நிதி சோசடியில் ஈடுபட்ட இலங்கையருக்கு சிறை

இலங்கை சேர்ந்த முருகையா செல்வகுமார் என்ற நபர் கடனட்டையை பயன்படுத்தி பாரியளவிலான நிதி சோசடியில் ஈடுபட்டதால் இங்கிலாந்து நீதிமன்றத்தினால் சிறைவைக்கப்பட்டுள்ளார் வெஸ்லி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் பணியாற்றிய குறித்த நபர் கடனட்டை கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் இயந்திரத்தை, தொழிநுட்ப உபகரணமொன்றை பொருத்தி எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு வருவோரின் வங்கிக் கணக்கு விபரங்களை திருடியுள்ளார் என சர்வதேச தகவல் குறிப்பிடுகின்றன.
இந்த விபரங்களூடாக வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களின் பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக சந்தேக நபருக்கு எதிரா குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நபரினால் கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் 517 கடனட்டைகளூடாக சுமார் 41 ஆயிரத்து 500 ஸ்ரேலிங் பவுண் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com