லசந்த கொலை வழக்கின் சந்தேக நபர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில்
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான கொலை வழக்கு 49வது தடவையாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கல்கிசை பிரதம நீதவான் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை எதிர்வரும் 21 ஆம் திகதி நீதிமன்றில் சமர்பிக்குமாறு களுபோவில போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கும் அரச இராசாயன பகுப்பாய்வாளருக்கும் கல்கிசை பிரதம நீதவான் நிரோஷா பெர்னாண்டோ உத்தரவு பிறப்பித்துள்ளார்
0 comments :
Post a Comment