Saturday, June 18, 2011

11000 புலிகளை எதற்காக படையினர் காப்பாற்றினர்? கேள்வி எழுப்புகிறார் தயான்.

இலங்கை இராணுவம் பொது மக்களை கொன்றொழித்ததாக குற்றம் சுமத்தப்படுமாயின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுத்தினரிடம் சரணடைந்த 1100 புலிளின் உயிர்களை காப்பாற்றி அவர்களுக்கு புன்ர்வாழ்வளிக்கப்படுகின்றமை எவ்வாறு என்ற கேள்வியை பிரான்சுக்கான தூதுவர் தயான் ஜெயதிலக எழுப்பியுள்ளார்.

இலங்கையில் கொ லைக்களம் எனும் தொனிப்பொருளில் சனல் 4 தொலைக்காட்சி யில் வெளியிடப்பட்ட காணொளி குறித்து பிரான்ஸிலுள்ள ஆர்எப்ஐ என்கின்ற வானொலி அவரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.

அவர் அவ்வானொலிக்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் யுத்தக் குற்றம் இடம்பெற்றதாகக் கூறி சில சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள காணொளி மூலமான குற்றச்சாட்டுக்கள் ஈராக் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு சமனானது எனவும் அவர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com