Thursday, April 7, 2011

மீண்டும் ஜப்பான் கடற்பகுதியில் கடும் நிலநடுக்கம், ஆழிப்பேரலை எச்சரிக்கை.

ஜப்பானின் ஃபுகுஷிமா மாகாணத்தை ஒட்டிய கடற்பகுதியில் சற்று முன் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை அடுத்த ஆழப்பேரலை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஃபுகுஷிமாவிற்கு வடக்கில், கரையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவை உலுக்கியுள்ளது.

மார்ச் 11ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பமும், அதையடுத்து ஏற்பட்ட ஆழிப்பேரலையும் தாக்கியதன் விளைவாக ஃபுகுஷிமா அணு மின் நிலையம் செயலிழந்து, அதிலிருந்து இன்று வரை அணுக் கதிர் வீச்சு பரவி வருகிறது. இந்த நிலையில், அதே பகுதியில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் வினையாக ஏற்படும் ஆழிப்பேரலை 3 அடி உயரத்திற்கு எழும்பி கரையைத் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com