Tuesday, March 8, 2011

14ம் திகதிக்கு முன்னர் சுவரொட்டிகள் அகற்றப்படவேண்டும்.

தற்போது காட்சிப்படுத்தபட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகள் பதாதைகளை எதிர்வரும் 14ம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் அகற்றவேண்டும் என அனைத்து தரப்பினருக்கும் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை சட்டவிரோதமாக காட்சி படுத்தபட்டுள்ள சுவரொட்டிகள் பதாதைகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை 100க்கும் மேற்பட்ட தேர்தல் வன்முறைகள் கிடைத்துள்ளதாகவும் 135 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மகர பிரதேசத்தில் பேட்டியிடும் பெண்வேட்பாளர் மீது முவர் தாக்குதலில் கர்ப்பிணியான அவ்வேட்பாளர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக கைதுசெய்யப்பட்ட முவரும் எதிர்வரும் 11ம திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com