Thursday, February 24, 2011

சர்வதேச செஞ்சிலுவை சங்க யாழ். கிளை மூடப்பட்டது

சர்வதேச செஞ்சிலுவை சங்க யாழ். கிளை மூடப்பட்டு அதன் நடவடிக்கைகள் இன்றிலிருந்து கொழும்பு பிரதான காரியாலயத்தின் ஊடாக செயற்படுத்தப்படுமென அந்த சங்கம் அறிவித்துள்ளது. யாழ். ஜெயப்பூரில் அமைக்கப்பட்டிருந்த செஞ்சிலுவை காரியாலயத்தின் ஊடாக யுத்த காலத்தின் போது பொது மக்களுக்கு பல சேவைகள் வழங்கப்பட்டன.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் யாழ். கிளை சுமார் 20 வருடங்களாக செயற்பாட்டில் இருந்து வந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com