Friday, February 18, 2011

காம ஆசையை நிறைவேற்றாத பெண்ணின் உடலில் ஆணி ஏற்றிய ஏஜமானர்கள்.

சவுதி அரேபியாவில் தான் பணிபுரிந்த வீட்டு உரிமையாளரின் காம சுகத்தை நிறைவேற்ற மறுத்த இலங்கை வீட்டுப்பணிப் பெண்ணின் உடலில் ஆணி ஏற்றபட்ட மனித குலத்துக்கு கேடு விளைவிக்கும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காலி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலங்கைநெற் க்கு தகவல் தருகையில் குறிப்பிட்ட பெண்ணின் உடலில் நான்கு ஆணிகள் ஏற்றப்பட்டு அவற்றில் ஒன்று கழற்றப்பட்டுள்ளதாகவும், மூன்று ஆணிகள் உடலில் உள்ளதாகவும் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட பெண்மணி மேலதிக சிகிச்சைக்காக காராப்பிட்டிய வைத் தி யசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பேண் முறைப்பாடு செய்கையில் தான் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர்கள் இக்கொடுமையை புரிந்தாக தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மீதான சோதனையின்போது அவரது உடலில் ஆணிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிகிச்சைகளின் மூலம் காலி கராபிட்டிய வைத்தியசாலை வைத்தியர்களால் சிகிச்சைகள் மூலம் கம்பித்துண்டொன்று அகற்றப்பட்டுள்ளதுடன், மேலும் மூன்று ஆணிகள் உடலினுள் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com