Saturday, January 1, 2011

மொடர்ன் விபச்சார வியாபரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயாருகின்றது.

கொழும்பில் லிபர்ட்டி பிளாசா வர்த்தக கட்டிடத் தொகுதியொன்றில் ஆடம்பர விபசார விடுதியொன்றை நடத்திவந்த மெடம் ஜீனா என அறியப்பட்ட செல்வந்த பெண்ணுக்கு எதிராக விபசாரம் மற்றும் மனிதக்கடத்தல் குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்வதற்கு சட்டமா அதிபர் திட்டமிட்டுள்ளார்.

மெடம் ஜீனா என அறியப்பட்ட, ரோஸ்மேரி பெலிசியா பெரேரா எனும் இப்பெண் கடந்த காலத்தில் பல அரசியல் பிரபலங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடனான தொடர்பில் கைது செய்யப்படுவதிலிருந்து நீண்டகாலமாக தப்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் கொள்ளுப்பிட்டியிலுள்ள விபசார விடுதியொன்றில் ஊழல் தடுப்புப்பிரிவின் பொறுப்பதிகாரி ஜனக டி சில்வா தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்றினால் நடத்தப்பட்ட முற்றுகையின்போது இப்பெண் கைது செய்யப்பட்டார்.

அவருடன் பாலியல் தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்ட இலங்கை மற்றும் உஸ்பெகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

பெலிசியா மீது மனிதக்கடத்தல் மற்றும் விபசார விடுதி நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன. இக்குற்றச்செயலுக்கு உதவியதாக ஏனைய பெண்கள் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, உஸ்பெகிஸ்தான் பெண்கள் இருவரை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர விடுதலை செய்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com