Tuesday, December 14, 2010

பிரபாகரன் ஒருவர் உருவாவது தவிர்க்கமுடியாதது. சரத் பொன்சேகா.

ஜனாதிபதியின் செயற்பாடுகள் மீண்டும் ஒரு பிரபாகரனை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார். சிறையிலிருந்தவாறு நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள அவர், அதில் மேலும் கூறியிருப்பதாவது:

ஹிந்திப்பட அரசியல்வாதி போன்று தனக்கு எதிரான அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை அடக்கியொடுக்க முனையும் ராஜபக்சவின் செயற்பாடுகள் நீண்ட காலத்துக்கு நிலைக்காது.

தன்னையும் குடும்பத்தையும் முன்னிறுத்திய அவரது அரசியல் செயற்பாடுகள் இலங்கை மக்களுக்கு எந்த நன்மையையும் தராது.

எந்தவொரு அரசியல் தலைவராவது தனது அரசியல் எதிராளிகளுக்கெதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பாரானால் அவர் ஒரு கோழையாவார். அத்துடன் தனது எதிராளிகளை சிறையில் தள்ளும் அரசியல் தலைவர் ஒரு சர்வாதிகாரியாவார்.

அதிபரின் இன்றைய செயற்பாடுகள் யுத்தம் காரணமாக பாதிப்புற்றவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் தரப்போவதில்லை. அதற்குப் பதிலாக அவர்களை மென்மேலும் துன்புறுத்தவே செய்யும்.

அவ்வாறான நிலை தொடரும் பட்சத்தில் இன்னொரு பிரபாகரன் உருவாவது நிச்சயம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com