Tuesday, December 28, 2010

விக்கிரமபாகு கருணாரட்ண மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டாராம்.

லண்டன் சென்றிருந்த லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண நாடுதிரும்பியிருந்தபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டிருந்தார். லண்டன் சென்றிருந்த அவர் அங்கு புலிகளின் ஆதரவாளர்களுடன் இணைந்து அதிபர் மஹிந்தாவுக்கு எதிராக சதிகளை செய்திருந்தார் என குற்றம் சுமத்தியே அவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.

இத்தாக்குதல் தொடர்பாக விக்கிரமபாகு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விடம் முறையிட்டுள்ளாராம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com