Saturday, December 25, 2010

உலகத்தாருக்கு தேவ குமாரர் அளித்த உறுதி மொழிகள்


இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

நீதியின் நிமித்தம் துன்பப்படுபவர்கள் பாக்கியவான்கள்; பரலோக இராஜ்யம் அவர்களுடையது.

நியாயப் பிரமாணத்தையானாலும், தீர்க்க தரிசனங்களேயானாலும் (அவைகளை) அழிப்பதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

மனிதர்களுடையை தவறுகளை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரம்பிதா உங்களையும் மன்னிப்பார்; மனிதர்களுடைய தவறுகளை நீங்கள் மன்னிக்காதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தவறுகளையும் மன்னிக்க மாட்டார்.

முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது (வாழ்வின் தேவைகள்) எல்லாம் உங்களுக்குக் கொடுக்கப்படும்.

ஆகையால் நாளைக்காக கவலைப்படாதிருங்கள்; நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காக கவலைப்படும். அந்தந்த நாட்கள் அதனதன் பாடு போதும்.

கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது திறக்கப்படும்.

ஏனென்றால் கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்கு திறக்கப்படும்.

பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

வருதப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுங்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

மரம் நல்லதென்றால், அதன் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதன் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதன் கனியால் அறியப்படும்.

விவிலியம், மத்தேயு, அதிகாரம் 5 முதல் 12.


இறைவனை அடைய தேவ குமாரர் காட்டிய வழி

ஜீவிதத்திற்கான வழியையும், அணுகுமுறையையும் காட்டியதோடு நிற்கவில்லை, இறையனுபவத்தை பெறுவதற்கான வழியையும் காட்டுகிறார் தேவ குமாரர்.

இதோ அவர் கூறியது: “இடுக்கான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; (இறையுலகின்) வாசலிற்க்குப் போகும் வழி விரியும்; வழி விசாலமுமாயிருக்கிறது; அந்த வழியில் பிரவேசிப்பவர்கள் அனேகர்.” என்றும், “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்றும் கூறி தெளிவாக வழிகாட்டியுள்ளார் (மத். அதி.7.13,14).

நம்முடைய புறத்தை நாடும் புத்தியையும், புலன்களையும் அடக்கி நமது ஜீவனின் உட்சென்று நமது உண்மையறிய கர்த்தர் வழிகாட்டியுள்ளார் என்று மேற்சொன்ன விவிலிய வாசகங்களை விளக்கிக் கூறியுள்ளனர் ஆன்மீக முன்னோடிகள்.

நம்மை நாமறிந்து இறைவனின் பாதையில் நடப்பதை திசை திருப்பக்கூடிய போலிகளையும் கர்த்தர் அடையாளம் காட்டியுள்ளார்:

“கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்தில் அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” என்று கூறியது மட்டுமின்றி, அவர்களின் செயல்களால் அவர்களை அடையாளம் காணுங்கள் என்றும் எச்சரித்துள்ளார்: “அவர்களுடைய கனிகளால் (செயல்களால்) அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்புதர்களில் அத்திப் பழங்களையும் பறிக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பி அடையாளம் காட்டியுள்ளார்.

தன்னை கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவர்கள் அல்ல, “பரலோகத்திலிறுக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கின்றவனே பரலோக சாம்ராஜ்யத்தில் பிரவேசிப்பான்” என்று உறுதியாகக் கூறியுள்ளார் தேவ குமாரர்.

இப்படி வாழ்வையும் விளக்கி, அதனை எதிர்கொள்வதற்கு வழியும் காட்டி, இறைவனை நாடச் சொல்லி, அதற்கான ரகசியத்தையும் எடுத்துரைத்து ஒரு முழு வழி காட்டியாய் வாழ்ந்தார் தேவ குமாரர்.

கர்த்தர் பிறப்பு இவ்வுலகிற்கு நல் வழிகாட்டியது, அவரது உலக வாழ்வின் முடிவு நம்மை, நாம் வாழும் இவ்வுலகை புனிதப்படுத்தியது.

நமது வாழ்வின் ஒளியாய் திகழும் கர்த்தரின் பிறப்பை உளமார மகிழ்ந்து கொண்டாடுவோம். அவர் காட்டிய உண்மைப் பாதையில் நடந்து அவர் உறுதியளித்த பரலோக சாம்ராஜ்யத்தை வரவேற்கத் தயாராவோம்.

உளம் கனிந்த கிறிஸ்மஸ் வாழ்த்துகள்


1 comments :

appu December 25, 2010 at 6:08 PM  

Wish you all A Merry Christmas,
May the Joys of the season
Fill your heart with goodwill and cheer.
May the chimes of Christmas glory
Add up more shine and spread
Smiles across the miles,
To-day & In the New Year.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com