Thursday, November 11, 2010

இலங்கைப் படையினரின் நற்பெயருக்கு அல் ஜசீரா கலங்கம் ஏற்படுத்துகிறதாம்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இலங்கைப் படையினர் சர்வதேச விதிமுறைகளை மீறி இனப்படுகொலையை செய்துள்ளதாக தெரிவித்து சில படங்களை அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. அல் ஜசீராவில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என மறுதலித்துள்ள இலங்கை அரசு விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் என மற்றுமொரு கதையினை ஒளிபரப்பி நாட்டின் பாதுகாப்பு படையினரது நற்பெயருக்கு கலங்கமேற்படுத்தவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை வீணடிக்க அல் ஜஸீரா செய்திச் சேவை முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதுவிதமான நம்பத்தகு ஆதாரங்களுமின்றி கிடைக்கப்பெற்ற ஒருசில புகைப்படங்களை கொண்டு சித்தரிக்கப்பட்ட ஒரு செய்தியினை அல் ஜஸீரா வெளியிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான சித்தரிக்கப்பட்டு செய்திகளுக்கு கடுமையான கண்டனத்தையும், மறுப்பினையும் தெரிவிப்பதோடு, ஒருசில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் இவ்வாறான முனைப்புகளை முன்னெடுத்து இலங்கையின் பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயல்வாதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com