Wednesday, November 10, 2010

லஞ்சம் வாங்கிய காண்டபிளுக்கு 3 வருட சிறை. நீதி மன்றில் மயங்கி விழுந்தார்.

அனுமதியில்லாமல் மரங்களை கடத்துபவர்களிடமிருந்து லஞ்சம் வாங்கிய குற்றம் நிருபிக்கப்பட்ட பொலிஸ் காண்டபிள் ஒருவருக்கு கொழும்பு உயர் நீதி மன்றின் நீதிபதி சுனில் ராஜபக்ச 3 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். தீர்ப்பு வழங்கப்பட்ட மறுகணம் அதிர்சியினால் பொலிஸ் காண்டபிள் குற்றவாளிக்கூண்டிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

சிறைத்தண்டனையுடன் 15000 அபராதப்பணமும் , லஞ்சமாக பெற்ற 50000 ரூபாவும் குற்றவாளியினால் செலுத்தப்படவேண்டும் எனவும் அவற்றை செலுத்த தவறும் பட்சத்தில் மேறும் ஒன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும் தீர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com