Thursday, October 28, 2010

கிழக்கு மாகாணத்தில் சீன புலனாய்வாளர்கள் ஊடுரிவியுள்ளனர். ரிஎம்விபி.

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் சீன நிறுவனங்களும் பங்கெடுத்துள்ளது. இவ்வாறன நிறுவனங்களின் ஊழியர்களாக உள்ள சீனப்பிரஜைகளில் சீனா வின் முக்கிய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்தினுள் ஊடுருவி உள்ளமை தெரியவந்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் கைலேஸ்வரராஜா லக்பிம விற்கு தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்குரிய சீனப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்பான தகுந்த சாட்சியங்கள் தம்மிடமுள்ளதாக குறிப்பிட்டுள்ள கைலேஸ்வரராஜா , புலனாய்வாளர்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு தமது உறுப்பினர்களுக்கு பணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கைலேஸ்வரராஜா வின் மேற்படி கருத்து கடந்த 1984 , 85 ஆண்டு காலப்பகுதிகளை மீட்டிப்பார்க்க வைத்துள்ளது. அக்கால கட்டத்தில் வட கிழக்கு மாகாணங்களில் சுற்றித்திரிந்த பிச்சைக்காரர்கள் யாவரையும் தமிழ் குழுக்கள் பதம் பார்த்தமை யாவருக்கும் நினைவிருக்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com