Friday, October 22, 2010

அகாலமரணஅறிவித்தல்

இலங்கை மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும்கொண்டிருந்த செல்வன் அமலதாஸ் புஸ்பாகரன் (பாபு) அவர்கள் 20.10.2010 சுவிஸ் பேர்ன்மாநகரத்தில் அகாலமரணமடைந்தார். அன்னார், திருவாளர, அமலதாஸ் மேரிறோசறி தம்பதிகளின் அன்பு மகனும், சசிகரன், ரவிச்சந்திரன், செபஸ்ரிகரன் ஆகியோரின் அன்புச்சகோதரனும் சாசங்கி சஐ_த் வெகித் ஆகியோரின் மாமனாரும், தவராஜ், யோகராஜ் (சவுதிஅரேபியா), அன்ரன்ஜெயராஜ் (பிரித்தானியா), நவரத்தினராஜ் (ஜேர்மனி), மகாராஜ் பிரித்தானியா ஆகியோரின் அன்பு மருமகனும் , திருமதி கந்தசாமி, திருமதி மேரி அஞ்சலி அவர்களின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் உற்றார் உறவினர்களின் பார்வைக்காக Schosshaldenfriedhof Ostermundigenstr. 116, (Richtung Ostermundigen Bus nr. 10, nach dem Station von Rossengarten aussteigen.)

பார்வையிடும் நேரம்

23.10.10 சனிக்கிழமை காலை 8.00-19.00வரையும்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 14.00முதல் அஞ்சலிநிகழ்வும் இடம்பெறும்

முக்கியகுறிப்பு

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் அவர் பிறந்த இடமாகிய மட்டக்களப்பில் நடைபெறுமென்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்


செபஸ்ரிகரன் சுவிஸ்) 0041796935597 , 0041796935597

அற்புதராஜா சுவிஸ்) 0041319916119 , 0041319916119

அன்ரன் ஜெயராஜா பிரித்தானியா)00442087651206 , 00442087651206

மகாராஜா பிரித்தானியா) 00442086794151 , 00442086794151

சசிதரன் பிரித்தானியா) 00442086850665 , 00442086850665

நவத்தினராஜா ஜேர்மனி 00492501921909 , 00492501921909



1 comments :

Unknown October 24, 2010 at 10:24 PM  

REST IN PEACE BABU ANNA...


எங்களை சோகத்தில் தள்ளிவிட்டு நீர் மரணத்தை ஏன் தேடி போனீர்?
கடைசியாய் எம்மை காணவா, என்றும் உதவியை கேளாத நீர் அன்று எம்மை நாடினிர்?
சிந்து உன் சமையலை சாப்பிட வேண்டும் என்று சொல்லி செண்டிரே, அப்பிடியே சென்றதற்கு என்மீது என்ன கோவமோ?
உமது அமைதியானே பேச்சாலும், நேசம் கலந்த சிரிப்பாலும் எமது மனதை திருடி சென்றாயே!
அவற்றை உன்னோடு கொன்று சென்றாயே!
உமது சாந்தமான முகத்தை கண்ணும் பொது கோவம் கூட பறந்து போகும்!
அவை பறந்து சென்ற மாதிரி நீர் ஏன் எம்மை பிரிந்து பறந்தீர்?
நீர் எம்மை பிரிந்தால் எங்கள் மனது தங்கது என்ன தெரிந்தும், ஏன் அந்த இறைவன் உன்னை எம்மிடத்தில் இருந்து பிரித்தார்?
கொஞ்ச காலம் தான் நாம் பழகி இருந்தாலும், உமை என் அண்ணாவாக நினைத்து இருந்தேன்!
நீர் எம்மை விட்டு பிரிந்ததும் எமது நெஞ்சம் உன்னை காண துடிக்கிறது!
உமை நான் சந்தோஷமா சென்று வாருங்கோ அண்ணா என்று வழி அணிபினேன்!
நீர் அப்பிடியே சென்று விட்டீரே அண்ணா!

உம் குடும்பத்தை விட்டு,
எம்மை விட்டு,
செல்ல உமக்கு எப்பெடி மனசு வந்தது?
உம் நினைவு எப்பொழுதும் எம் நெஞ்சத்தில் இருந்து மறையாது!
என்றென்றும் உன்மீது வைத்த பாசம் எம் மனதில் இருந்து விலகாது!

உன் பிரிவுத்துயரில் வாடும் ஆன்டி (ஆனந்தி), அங்கிள் (உதயன்), தம்பி (கண்ணன்), தங்கச்சி (சிந்து)

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com