Wednesday, October 20, 2010

சாய்ந்தமருது கடற்கரையில் குண்டுகள் மீட்பு

கல்முனை சாய்ந்தமருது கடற்கரையில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து கல்முனை பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்று சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது கடற்கரை பகுதியில் இருந்து 5 மோட்டார் ஷெல்கள் மற்றும் ஒரு சாதாரண குண்டு என்பவற்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்தக் குண்டுகள் உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com