Monday, September 6, 2010

யாழில் துண்டுப்பிரசுரங்ளை ஒட்டிய ஜேவிபி உறுப்பினர்கள் இருவர் கைது.

இலங்கை அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு யாழில் துண்டுபிரசுரங்களை ஒட்டிகொண்டிருந்த இருவரை நேற்று காலை 5.45 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது தொடர்பாக ஜனநாயக விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித கேரத் அவர்கள் இலங்கைநெற் கூறுகையில், நேற்று முழுநாட்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமது கட்சி உறுப்பினர்களான லலித் வீரராஜூ , குமார் ஆகியோர் வீடுகளை உடைத்து கொள்ளையிட முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் நேற்று பிற்பகல் யாழ் நீதிபதியின் வீட்டில் ஆஜர் செய்யப்பட்டபோது , நீதிபதி 50000 ரூபா சரீரப் பிணையில் அவர்களை விடுவித்துள்ளார்.

இவர்கள் தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை விடுவிக்கப்படலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com