Tuesday, September 7, 2010

இந்திய இராணுவத் தளபதியின் மனைவி ரணவிரு செவண விற்கு விஜயம்.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதியின் மனைவி திருமதி. பார்தி சிங் , போரில் அவயங்களை இழந்து அங்கவீனர்களாக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கான பராமரிப்பு இடமான ரணவிரு செவணவிற்கு சென்று அங்குள்ளவர்களை பார்வையிட்டுள்ளார்.

இந்திய இராணுவத் தளபதியின் மனைவியை வரவேற்ற இலங்கை இராணுவத் தளபதியின் மனைவி திருமதி மஞ்சுலிகா ஜெயசூரியா , ரணவிரு செவண நிலையத்தில் தங்கியுள்ள இராணுவ வீரர்களுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை அவருக்கு காண்பித்தார். அத்துடன் அங்குள்ள இராணுவ வீரர்கள் சார்பாக ரணவிரு செவணவின் இயக்குனர் பிரிகேடியர் பெரமுணகமகே நினைவுப் பரிசு ஒன்றினை வழங்கினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com