Thursday, September 9, 2010

யாழ்பாணத்தில் புதிய சிறைச்சாலை.

யாழ்பாணத்தில் புதியதோர் சிறைச்சாலை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அனுதியை சிறைச்சாலைகள் மற்றும் புனருத்தாபன அமைச்சர் டியு குணசேகர வேண்டியிருந்தார். சிறைச்சாலையை அமைப்பதற்கு 272 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் தற்போதுள்ள சிறைச்சாலை நான்கு வாடகை வீடுகளிலேயே இயங்கிவருகின்றது. புதிய சிறைச்சாலை , சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமான பண்ணைப் பிரதேசத்திலுள்ள காணியொன்றில் அமைக்கப்படவுள்ளது. இச்சிறைச்சாலை 1000 கைதிகளை தடுத்து வைக்கக்கூடியதாகவும் , புனருத்தாபன வேலைத்திட்டங்களை முன்னெடுக்கக் கூடியதாகவும் அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com