Friday, September 24, 2010

புலிச் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்.

கடந்த காலங்களில் கொழும்பு நகரில் குற்றச்செயல்களில் ஈடுபட வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேகநபர்கள் 17 பேர் எதிர்வரும் மாதம் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பல இடங்களில் வைத்து இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர்களில் பலர் மன்னார் தொடக்கம் சிலாபம் வரையான கடற்பகுதியில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com