Friday, September 3, 2010

அரசியல் யாப்பு மாற்றத்தை ஆதரிப்பதாக ஐ.தே.க ஐ சேர்ந்த மேலுமிருவர் குத்துக்கரணம்.

நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையில் ஜனாதிபதி ஒருவர் இருதடவைகளுக்கு மேலாக பதவிவகிக்க முடியாது என்ற வரையறையை முடிவுக்கு கொண்டுவரும்பொருட்டு அரசியல் யாப்பில் மாற்றங்களை தாம் ஆதரிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏர்ல் குணசேகர , லக்மன் செனவிரத்தின ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை விசேடமாக ஏற்பாடு செய்து இவ்விடயத்தினை மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ள மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 8ம் திகதி பாராளுமன்றில் இடம்பெறவுள்ள அரசியல் யாப்பு மாற்றத்திற்கான வாக்கெடுப்பின்போது ஆதரவாக வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாகவும் 8ம் திகதியை நெருங்கும்போது ஐக்கிய தேசியக் கட்சியினுள் உள்ள மேலும் பலரை யாப்பு மாற்றத்தினை ஆதரவாக வாக்களிக்க வைக்க முயற்சிகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com