Wednesday, September 22, 2010

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தம்பிலுவில் மாணவி முதலிடம்.

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவின்படி தமிழ் பிரிவில் 193 புள்ளிகளை பெற்று திருக்கோவில் தம்புலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மலவன் சுபதா முதலிடம் பெற்றுள்ளார். அதேநேரம் இரண்டாம் மூன்றாம் இடங்களை கண்டி , வவுனியா மாணவர்கள் அடைந்துள்ளனர். 192 புள்ளிகளை பெற்று கண்டி ஸ்ரீ ராமகிருஷ்ண மத்திய கல்லூரி மாணவன் சுக்ரி முஹமட் ஷபீர் இரண்டாம் இடத்தையும், 190 புள்ளிகளை பெற்று வவுனியா விபுலானந்த வித்தியாலய மாணவன் யோகேஸ்வரன் பிரியநேசன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் வெளியாகியுள்ள முடிவுகளின்படி196 புள்ளிகளை பெற்ற பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய மாணவன் சனுஜ கல்யான் எதிரிசிங்க நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்துள்ளார். அத்துடன் இதேவேளை சிங்களப் பிரிவில் 194 புள்ளிகளைப் பெற்று 2 ஆம் இடத்தை 3 மாணவர்கள் பிடித்துக் கொண்டுள்ளனர்.

நவின் ஜசங்க பிரேமரத்ன - மினுவாங்கொட ஹொரகஸ்முல்ல ஆரமப்பிரிவு பாடசாலை
ஜே.கலனி பபஸர - மதுகம மீகதென்ன ஆரம்பபிரிவு பாடசாலை
லசித் நவோத்ய - காலி மஹிந்த வித்தியாலயம்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com