Monday, September 20, 2010

200 லக்சர் இ தொய்பா தீவிரவாதிகள் கொழும்பில் பதுங்கல்: அமெரிக்கா எச்சரிக்கை

பாகிஸ்தானின் லக்சர் இ தொய்பா அமைப்பின் 200க்கும் அதிகமான தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க புலனாய்வுதுறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள எச்சரிக்கை தகவலில் லக்சர் இ தொய்பா அமைப்பு இந்தியாவுக்குள் நுழைவதற்கு இலங்கையை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் பயிற்சி பெற்றதாக கூறப்பட்ட அந்த அமைப்பின் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, ஏற்கனவே இங்கு வெளிநாட்டு தீவிரவாதிகள் அமைப்பு ஒன்றும் இல்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்திருந்ததை மேற்கோள்காட்டியுள்ளார்.

இவ்வாறான எச்சரிக்கை அறிக்கை ஒன்றும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com