Wednesday, August 18, 2010

இலங்கையில் அமெரிக்கப்படையினர்.

சுமார் 40 மேற்பட்ட அமெரிக்கப்படையினர் நாட்டினுள் நுழைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர்கள் இலங்கையில் இடம்பெறும் வைத்திய மற்றும் பொறியல் வேலைத்திட்டங்களில் பங்கு கொள்வதற்காகவே வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர்களில் அமெரிக்காவின் முப்படையினரும் அடங்குகின்றனர்.

இவர்கள் அமெரிக்காவின் ஆசிய பசிபிக் கட்டளை மையத்தினைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்கள் , இராணுவத்தினர் , வைத்திய – பொறியியல் துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் பங்கெடுப்பர் என தெரிவித்துள்ளது. இவர்கள் தற்போது அனுராதபுரம் , புத்தளம் ஆகிய பகுதிகளில் தங்கியுள்ளதாக தெரியவருகின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com