Thursday, June 24, 2010

ஐ.நா வின் விசாரணைக்குழு நாட்டினுள் கால்வைக்க அனுமதிக்கப்படமாட்டாது. G.L

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா வின் செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்டுள்ள குழுவினை நாட்டினுள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் மாநாடொன்றில் பேசிய அமைச்சர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் , குறிப்பிட்ட குழுவினர் இலங்கையினுள் நுழைவதற்கான வீசா வழங்கப்படமாட்டாது எனவும் , இக்குழு நியமனம் தொடர்பாக தாம் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வந்த தருணத்தில் ஒரு முடிவினை எட்டுவதற்கு முன்னர் ஐ.நா குழுவினை நியமனம் செய்துள்ளது என தெரிவித்த அவர் இக்குழுவின் நியமனம் அவசியமற்றது எனவும் இதன் செயற்பாடுகள் எந்தவிதத்திலும் பயனள்ளதாக அமையப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் போர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கென தாம் ஒரு விசாரணைக் குழுவொன்றினை நியமித்துள்ளதாகவும் , ஐ.நா வின் விசாரணைக்குழு ஒன்றுக்கொன்று முரண்பாடுகளையே தோற்றுவிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com