Sunday, June 20, 2010

கரோ தமிழ் பாடசாலையின் நிர்வாக தேர்தலும் BTF ஜனநாயக மறுப்பும்

கரோ தமிழ் பாடசாலை இலண்டனில் இயங்கும் தமிழ் பாடசாலைகளில் மிகவும் பழைமையானது. இங்கு இதுவரை காலமும் நிர்வாகத்திற்கான தேர்தல் என்பது நிகழ்ந்ததே இல்லை. மாறாக பெற்றோர்கள் எல்லோரினதும் புரிந்துணர்வுடன் ஒரு நிர்வாக குழு முன் மொழியப்பட்டு எல்லோரினதும் முழு ஆதரவுடன் புதிய நிர்வாக சபையினர் பொறுப்புக்களை ஏற்பார்கள். இது ஒரு சிறந்த ஜனநாயக வழியன்று.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் முற்று முழுதாக திறம்பட செயல்பட்டனர் எனவும் கூறமுடியாது. பல பெற்றோர்கள் நீணட காலமாக நிர்வாக சபையில் இருந்தனர். இதன் காரணமாக பாடசாலையினை தமது சொத்து போன்று நடத்த ஆரம்பித்தனர். உதாரணமாக தமது பிள்ளைகளையே எல்லா நிகழ்வுகளிலும் முன்னுக்கு விடுதல். அரசாங்கத்திடமிருந்து பெறும் உதவிப் பணத்தினை தமது உரிய நேரத்தில் விண்ணப்ப படிவங்களை அனுப்பி பெற முடியாமல் போனமை. கணக்கு விபரங்களை சரியாக காட்டாமை எனப் பல.

இந்த நிலையில் இவர்களுக்குள் குழுக்கள் தோன்ற ஆரம்பித்தது. இரண்டு வருடங்களிற்கு முன்னர் நடந்த நிர்வாக சபைத் தேர்தலில் இந்த குழுவாத வெளிப்பாடு பகிரங்கத்திற்கு வந்தது. பாடசாலைக்கு வெளியே இரு குழுக்களும் சந்தித்து ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இரு பக்கத்திலிருந்தும் பதவிகளிற்கு ஆட்கள் தெரியப்பட்டு ஒரு நிர்வாக குழுவினை அமைத்தனர். பாடசாலை பொதுக் கூட்டத்தினைக் கூட்டி பெற்றோர்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்தனர். இந்த நிர்வாக சபையில் சாதாரண உறுப்பினர்களாக மட்டுமே பெண்கள் இருக்கலாமென்பதும் அவர்கள் தேனீர் போட்டு கொடுப்பதற்கு மட்டுமே என்பதும் ஒரு எழுதப்படாத சட்டமாகும். ஏனெனில் ஒரு பெண் செயலாளர் பதவிக்கு தனது விருப்பத்தினை தெரிவித்த போது பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்படடிருந்தது. இறுதியில் அவர் நிர்வாக சபை தெரிவுக் கூட்டத்திற்கு முன்னரே தனது பிரச்சாரத்தினை கைவிட வேண்டியிருந்தது.

வழக்கமாக நிர்வாக சபை தெரிவுக் கூட்டத்தில் ஒவ்வொரு பதவிக்கும் பெயர்களை பிரேரிக்கும் படி அறிவிக்கப்படும். ஓவ்வொரு பதவிக்கும் ஒரே ஒரு பெயர் முன் மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும். கடந்த வருடம் நிகழ்ந்த நிர்வாக சபை தெரிவுக் கூட்டம் மிகவும் நகைப்புக்குரியதாக இருந்தது. பழைய நிர்வாக சபையினர் மேற்கூறிய வழியினை மறுத்து தாமே தொடர்ந்து இருக்க விரும்புவதாக கூறி புதிய நிர்வாக சபை தெரிவிற்கு கோராது இருந்தனர். நிர்வாக சபையின் சாதாரண உறுப்பினர் தெரிவிற்கு மட்டுமே புதிய பெயர்களை பிரேரித்தனர். ஒரு சில பெற்றோர்கள் இந்த ஜனநாயகமற்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் இருந்தனர். ஆனால் பாடசாலையின் நலனை கருத்தில் கொண்டு பழைய நிர்வாக சபையினை தொடர்ந்தும் இயங்க அங்கிகரித்தனர்.

இதன் பின்னணியில் இந்த வருட நிர்வாக சபை கூட்டம் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்றது. ஆனால் திரை மறைவில் பல மாதங்களாக புதிய நிர்வாக சபையினரை தீர்மானிக்கும் வேலைகள் நிகழ் நிர்வாக சபையினரின் ஆதரவுடனோ அன்றி அவர்கள் மீது நிர்ப்பந்தப்படுத்தப்பட்டோ மிகவும் திட்டமிடப்பட்டு நடந்து கொண்டேயிருந்தது. மிக நீண்ட காலமாக பாடசாலையின் நலனிற்காக உழைத்த நிர்மலனை தலைவராகவும் சமீப காலமாக பாடசாலைக்கு வரும் பெற்றோரான முரளிதரனை செயலாளராகவும் மேலும் நீண்ட காலமாக பெற்றோராகவும் பாடசாலையின் நலனிற்காகவும் பாடுபடும் ஜெயேந்திரனை காசாளராகவும் மேலும் பலரை அங்கத்தினராவும் குறிப்பாக நிர்மலசங்கர் (BTF- British Tamil Froum இன் தீவிர செயற்பாட்டாளர்) இனையும் உள்ளடக்கியிருந்தனர். முதலில் நிர்மலசங்கரின் பெயர் செயலாளர் பதவிக்கே முன் மொழியப் பட்டிருந்தது. இறுதியி நேரத்தில் இவரின் பெயர் சாதாரண உறுப்பினர் பதவிக்கு மாற்றப்படடிருந்தது.

மேலும் முரளிதரன் என்னும் நபர் பாடசாலையில் படிக்கும் பெண் பிள்ளைகளை தொட்டு தொட்டு பேசுவதாக ஒரு முறைப்பாடு நிர்வாகத்திற்கு ஏற்கனவே சம்பந்தப்பட்ட பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்டுமுள்ளது. மேலும் பாடசாலையில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகளுக்கு தொலை பேசியில் பிறந்த நாள் வாழ்த்து கூறி பெற்றோர்களிடம் நிறையவே வாங்கிக் கடடியுள்ள நபருமாவார். மேலும் பாடசாலையின் விளையாட்டு விழாக்களின் போது மைதானத்திற்கு குடிவகைகளை கொண்டு வந்து குடித்து கும்மாளம் போடவருமாவார்.

19 ஆம் திகதி நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்திற்கு என்றுமில்லாதவாறு பெரும் திரளான பெற்றோர்கள் வந்திருந்தனர். புதிய நிர்வாக சபை தெரிவு தொடங்கியது. இருவர் பெயர்கள் முன ;மொழியப்படடனர். முதலாமவர் நிர்மலன் இரண்டாமவர் பாலச்சந்திரன் - இவர் மிக நீண்ட கால பெற்றோரும் கடந்த காலங்களில் பாடசாலைக்காக மிகவும் உழைத்தவருமாவார்.

பொது இணக்கப்பாடின்மையினால் - பாடசாலையின் வரலாற்றிலே முதன் முதலாக வாக்கெடுப்பு நிகழ்ந்தது. பாலச்சந்திரன் 20 இற்குமதிகான வாக்குகளை பெற்றிருந்தார். ஆனால் நிர்மலசங்கர் முரளிதரன் போன்றோர் கணக்கிட்டது பிழை என பிரச்சனை எழுப்பினர். மீண்டும் வாக்கெடுப்பு நிகழ்ந்தது. பாலச்சந்திரனே மீண்டும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத மேற்படி குழுவினர் கூட்டத்தினை குழப்பினர்.

இறுதியில் நடப்பு நிர்வாகத்தின் தலைவர் தாமே தொடர்ந்து இருக்கப் போவதாக எதேச்சதிகாரமா முடிவெடுத்து கூட்டத்தினை முடித்துக் கொண்டார்.
கரோ தமிழ் பாடசாலையின் பெரும் பான்மையான பெற்றோர்கள் முரளிதரன் நிர்மலசங்கர் உள்ளடங்கிய எந்த குழுவையும் அவர்களின் தனிப்பட்ட செயற்பாடு மற்றும் அவர்களின் பின்னணி காரணமாக ஆதரிக்கப் போவதில்லை.

நடப்பு நிர்வாகமே நீங்கள் தொடர்ந்தும் எதேச்சதிகதரமாக பதவியினை நீடித்து கொண்டிருக்க முடியாது. பாடசாலையினை சீரழிவுக்கு இட்டுச் செல்வதனை தடுக்க உடனடியாக இரகசிய வாக்கெடுப்பின் ழூலம் புதிய நிர்வாக சபையினை அமைக்க ஒழுங்குகளை செய்யுங்கள். உங்கள் தனி நபர் கௌரவ பிரச்சனைகளை ஒதுக்கி வைத்து விட்டு சழூகத்தினை பற்றி சிந்தியுங்கள்.

-பாடசாலையின் நலன் விரும்பும் பெற்றோர்கள்-

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com