Tuesday, June 15, 2010

கென்யா செல்ல ஜெனரல் பொன்சேகாவுக்கு நீதிமன்ற அனுமதி வேண்டும் - கெஹெலிய

கென்யாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடாளுமன்ற ஒன்றியத்தில் கலந்துகொள்வதற்கு ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பட வேண்டும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்ற சலுகைகளுக்கமைய ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கிய போதிலும் அவர் வெளிநாடு செல்வதாயின் சட்ட அனுமதி தேவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜெனரல் பொன்சேகா தற்போது இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபராவார். அதானாலேயே அவரது வெளிநாட்டுப் பயணத்துக்கு சட்ட அனுமதி தேவைப்படுகிறது என்றும் ஊடக அமைச்சர் கெஹெலிய மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com