Friday, June 4, 2010

சுவிஸிலிருந்து வெளிநாட்டு குற்றவாளிகளை நாடு கடத்த திட்டம்.

சுவிற்சர்லாந்து சமூக நலத்திட்டங்களை மோசடி செய்தல் உள்ளிட்ட சகலவிதமான குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகளை நாடு கடத்துவது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் முயற்சி ஒன்றினை சுவிஸ் மக்கள் கட்சியினர் மேற்கொண்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்த நாட்டின் சட்ட முறைகளில் மாற்றம் ஒன்று செய்யப்படவேண்டுமானல் அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்கள் ஆணையை பெறவேண்டும். ஆதின் அடிப்படையில் வெளிநாட்டு குற்றவாளிகளை நாடு கடத்தும் திட்டம் தொடர்பில் நாடு தழுவிய ரீதியிலான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com