Thursday, June 24, 2010

ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனைகளுக்கு அடிபணியப் போவதில்லை

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு பெறுவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு இலங்கை அடிபணியப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு மனித உரிமை தொடர்பில் முன்னெடுத்துள்ள விடயங்களை எழுத்து மூலம் ஜூலை 1ம் திகதிக்கு முன்னர் வழங்கினால், இலங்கைக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது குறித்து ஐரோப்பிய கவுன்சில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பரிந்துரைக்குமென அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்த ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இடைநிறுத்த ஒன்றியம் இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய முடிவுக்கு அமைய எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட 3 ஆயிரத்து 200 பொருட்களை வரி விலக்குடன் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com