Sunday, June 20, 2010

கே.பி வவுனியா விஜயம். புலம்பெயர் புலிப்பினாமிகளுடனும் சந்திப்பு.

புலிகளின் ஆயுதத்கடத்தல் மன்னனும் பிரபாகரனின் மறைவின் பின்னர் புலிகளியக்கத்தின் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டவரும் தற்போது இலங்கை அரசின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழும் கே.பி வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார். புலம் பெயர் புலிப்பினாமிகளை தொடர்பு கொண்டு அவர்களை இலங்கைக்கு அழைத்து கலந்துரையாடியதன் பின்னர் இவ்விஜயம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. கனடா, ஜேர்மன், சுவிஸ், பிரான்ஸ், லண்டன் ஆகிய நாடுகளிலிருந்து சென்றுள்ள் 9 பேர் கொண்ட புலிப்பினாமிகள் குழுவொன்று கேபியைச் சந்தித்ததாக அரச பத்திரிகையான சண்டே ஒப்சேவர் தெரிவிக்கின்றது.

ஆனால் கேபியின் அழைப்பின் பேரில் புலம்பெயர் புலிப்பினாமிகள் பலர் இலங்கை வந்தடைந்துள்ளதாகவும் அவர்கள் இலங்கையில் பல்வேறு வகையான தத்தமது வியாபாரங்களைப் பெருக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன் அவர்களின் முயற்சிகளுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நம்பரகரமாக அறியமுடிகின்றது.

அதேநேரம் வன்னி பிரதேசங்களுக்கு மேற்படி குழுவினரின் விஜயம் தொடர்ந்தும் தமிழ் மக்களின் காதில் பூச்சுத்துவதற்கான முன்னெடுப்பேயாகும். புலம்பெயர் தமிழர்களிடம் போராட்டத்தின் பெயரால் சுருட்டப்பட்ட பணம் மற்றும் அதன் பெயராலுள்ள அசையும் - அசையா சொத்துக்களை பங்கிட்டுக்கொள்ளும் நோக்கில் கே.பி குழுவினரால் அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இச்செயற்பாடுகளுக்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் பலியாவார்களா என்பது கேள்வியே.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கே.பி மற்றும் நோர்வேயில் தலைமறைவாகவுள்ள நெடியவன் இருவருமே மகிந்த அரசுடன் உடன்படிக்கையுடன் சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. அதே நேரம் புலிகளின் சில அசையா சொத்துக்களை தமது பெயர்களில் வைத்துள்ள சில தனிநபர்களிடமுள்ள சொத்துக்களை பிடுங்குவதற்கு திரைமறைவில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதனை அறிந்த பலர் தலைமறைவாகியுள்ளதுடன் சிலர் உடன்படிக்கைகளுடன் இலங்கைக்குச் சென்று சொத்தினை பங்கிட்டுக்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இச்சொத்துக்களைச் சேர்பதற்காக புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்காக வங்கிக் கடன்களை எடுத்துக்கொடுத்தவர்கள் கடன்சுமை தாங்காது திண்டாடுகையில் புலிப்பினாமிகள் சொத்துக்களை பங்கிட்டு வருகின்றனர். இச்சொத்து பங்கிடும் விவகாரத்தில் கே.பி மாத்திரமல்ல நெடியவன் குழுவினரும் இலங்கை அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

இலங்கை சென்றுள்ள புலம்பெயர் புலிப்பினாமிகள் குழுவில் ஜேர்மனியிலிருந்து சிவனடியார் சிறுபதி கலந்துகொண்டுள்ளதுடன் ஜேர்மன் நாட்டில் புலிகளின் அசையும் அசையா சொத்துக்களை கொண்டுள்ளோரை கே.பி யுடன் ஒருங்கிணைப்பதில் தீவிரமாக இவர் செயற்படுவதாக ஜேர்மன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comments :

Anonymous ,  June 21, 2010 at 1:32 PM  

ithil paathikkappaddavarhal kooduthalaha swissilthan. intha nayal ippa thankalukkum iyakkathitkum thodarpillaathamaathiri irukirangal. makkalthaan paavam. kadansumaiai thankamal kastappaduhiraarhal.
ithil sampanthappaddavarhalin viparam peenthu eluthuhireen.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com