Saturday, June 5, 2010

ஐ.நா.விசாரணையாளர் குழுத் தலைவராக ஹோகண நியமனம்,

இஸ்ரேலின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர்கள் குழுத் தலைவராக ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித ஹோகண நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலஸ்தீன மற்றும் ஏனைய அராபிய மக்களின் மனித உரிமைகளை இஸ்ரேல் மீறிச் செயற்படுகின்றதைக் குறித்து விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபை மூன்று பேர் கொண்ட சர்வதேச விசாரணையாளர் குழுவை நியமனம் செய்துள்ளது.

இக்குழுவின் தலைமைப் பொறுப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது. பாலித கோஹண தலைமையிலான விசாரணையாளர்கள் குழு எகிப்து, ஜோர்தான்,சிரியா ஆகிய நாடுகளுக்கு இம்மாதம் நேரில் விஜயம் செய்து விசாரணைகளை நடத்தும் என்றும் ஐ.நா.சபை அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com