Thursday, June 10, 2010

7 புலிச் சந்தேக நபர்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் விடுதலை.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 விடுதலைப்புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணி இன்று உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இவர்கள் 2008 ஆம் ஆண்டு மூதூர் மற்றும் வவுனியா உள்ளிட்ட பிரதேசங்களில் கைதுசெய்யப்பட்டவரக்ளாவர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய போதுமான சாட்சியங்கள் இல்லாத நிலையில் இவர்களை விடுதலை செய்யுமாறு அரச சட்டத்தரணி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் அற்ற சந்தேக நபர்களை துரிதமாக விடுதலை செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையை நீதியரசர் ஷிராணி திலக்கரட்ன பாராட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com