Sunday, June 13, 2010

இலங்கைத் தமிழர்களுக்கு 50000 வீடுகளைக் கட்ட இந்தியா 1000 கோடி நிதியுதவி.

முதலமைச்சர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன்சிங்-ராஜபக்சே சந்திப்பு குறித்தும், இந்தியா- இலங்கை இடையேயான கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.

‘’இலங்கை தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா 1,000 கோடி தர சம்மதித்துள்ளது’’என்று தெரிவித்தார். அவர் மேலும், ‘’விழுப்புரம் ரயில் தண்டவாள தகர்ப்பு மிகவும் பயங்கரமானது.

ரயில்வே ஊழியர்களின் சாமர்த்தியத்தால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. ரயில் தகர்ப்பு சம்பவத்தில் ஈடுபட்டோரை பிடிக்க போலீசுடன் உளவுத்துறையும் தீவிரமாக செயல்பட்டுவருகிறது’’ என்றும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com