Monday, May 31, 2010

திரைப்பட தயாரிப்பாளர் சந்திரன் ரட்னம் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை

நுகேகொடவிலுள்ள தனது வீட்டில் வெடிபொருள்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த திரைப்படத் தயாரிப்பாளரும், பணிப்பாளருமான சந்திரன் ரட்னம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படாத நிலையிலேயே, கங்கொடவில நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார். இலங்கையின் யுத்தத்தை மையமாக வைத்து 'ஆனையிறவுக்கான பாதை' என்ற திரைப்படத்தை சந்திரன் ரட்னம் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்திரைப்படத்தை தயாரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சிலிருந்து பெற்றிருந்த விசேட உரிமத்தை சந்திரன் ரட்னம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியிருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com