Sunday, May 23, 2010

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பான அறிக்கை பாதுப்புச் செயலருக்குச் செல்கிறது.

இலங்கையில் இயங்கி வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவங்களின் நடவடிக்கை பற்றிய அறிக்கையொன்று விரைவில் பாதுகாப்புச் செயலாளருக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஒரு சில வாரங்களில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் இயங்கி வரும் ஆயிரக் கணக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு அறிக்கையிடப்படவுள்ளது.
குறிப்பாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சேவை ஓரு சமூகத்திற்கு மட்டும் நன்மை அளிக்கின்றதா அல்லது ஒட்டு மொத்த சமூகமும் நன்மை அடைகின்றார்களா என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பான நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் இணைக்கப்படவுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் இத்துடன் இணைக்கப்பட உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார் .

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com