Friday, May 28, 2010

விசேட அதிரடிப்படை பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகின்றது.

இலங்கை பொலிஸ் பிரிவின் கீழ் இயக்கி வந்த வீசேட அதிரடிப்படை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடந்த 12ம் திகதியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான வேண்டுதல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கவினால் அமைச்சரவைக்கு விடுக்கப்பட்டதுடன் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டள்ளது.

1983 ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனா அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட துணைப்படையான விசேட அதிரப்படைக்கு முதற் தளபதியாக ஜே. ஆர் ஜெயவர்த்தனவின் மகன் ரவி ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டிருந்தார் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அப்போது பாதுகாப்பு அமைச்சின் நேரடிக்கட்டுப்பாட்டிலிருந்த விசேட அதிரடிப்படை 1996ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவின் பணிப்புரையின்பேரில் பொலிஸ் மா அதிபரின் காண்காணிப்பின் கீழ் கொண்டவரப்பட்டது.

இலங்கையில் பயங்கரவாதத்தை அடக்குவதில் பெரும் பங்களிப்புச் செலுத்தியுள்ள விசேட அதிரடிப்படையினர் 1990ம் ஆண்டு இரண்டாம் ஈழப்போரின் பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாட்டங்களை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்திருந்துடன், அப்பிரதேசங்களில் எவ்வித கலகங்களும் ஏற்படாதவாறு கடமை மேற்கொண்டிருந்தனர்.

குறிப்பாக விஐபி செக்குறிரி எனப்படும் அதி முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வழங்குவதில் விசேட பயிற்சி பெற்றுள்ள விசேட அதிரடிப்படையினர் கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய சகல அசமந்த நிலைகளையும் சமநிலைப்படுத்துவதில் தமது பூணர பங்களிப்பினை வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பிரிவினரின் சேவையின் முக்கியத்துவம் கருதி அதை பாதுபாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com