Friday, May 28, 2010

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வன்னி மாணவன் விபத்தில் பலி

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்று வந்த பொறியில் பீடத்தை சேர்ந்த சண்முகநாதன் சுஜீவன் என்ற மாணவன் ஆனையிறவில் நடந்த விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை ஐந்து மணியளவில் ஆனையிறவுப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குறித்த மாணவன்மீது லொறி காற்றுப் போய் சரிந்தது. மோட்டார் சைக்களில் குறித்த மாணவனும் அவரது சகோதரனும் பயணம் செய்திருந்தனர். அவரது சகோதரன் காயங்களுடன் அதிஸ்ட வசமாக உயிர் தப்பி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் பலியாகிய சண்முகநாதன் சுஜீவன் கிளிநொச்சி திருவையாற்றை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com