Sunday, May 23, 2010

இந்தியாவில் தஞ்சமடைந்தோர் மீள் குடியேற்றப்படுவர். அமைச்சர் மில்ரோய்.

இந்தியாவில் சரணாகதியடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் விரைவில் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தசாப்தங்களாக நீடித்த யுத்தம் காரணமாக அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் சரணாகதியடைந்துள்ளனர்.

யுத்தம் காரணமாக படகுகள் மூலம் தென் இந்தியாவில் சரணாகதியடைந்த குறித்த இலங்கையர்கள் நீண்ட காலமாக அகதி முகாம்களில் தங்கியிருக்கின்றனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த அகதிகளை தமது சொந்தக் கிராமங்களில் மீள் குடியேற்றுவது தொடர்பிலான திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மீள் குடியேற்ற நடவடிக்கைகளை திட்டமிட்ட வகையில் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் சரணாகதி அடைந்துள்ள இலங்கைத் தமிழர்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது. 2003ம் ஆண்டு முதல் இதுவரையில் 6687 பேர் இலங்கையில் மீள் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com