சரணடையச் சென்ற புலிகளுடன் நம்பியார் நேரடித்தொடர்பினை வைத்திருக்கவில்லை. ஐநா.
இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளுடன் ஐ.நா. செயலரின் பிரதம அதி காரி விஜய் நம்பியார் நேரடித் தொடர்பு வைத் திருக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இன்னர் சிற்றிப் பிரஸ் இச் செய்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இன்னர் சிற்றிப் பிரஸுக்கு ஐ.நா. செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் மாட்டின் நெஸிர்கி தெரிவித்ததாவது,சரணடையுமாறு கோரப்பட்ட புலிகளுடன் தனக்கு நேரடித் தொடர்பு இருக்கவில்லை என விஜய் நம்பியார் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் இலங்கை அரசின் உயர் மட்டத்தினருடன் பேசி தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துக ளைப் பகிர்ந்து கொண்டார்.வேறு எதனையும் அவர் மேற்கொண்டி ருக்கவில்லை என ஐ.நா. செயலரின் பேச்சா ளர் மேலும் தெரிவித்ததாக இன்னர் சிற்றிப் பிரஸ் தெரிவித்துள்ளது.
1 comments :
vijey nampiyaar is one of ban kee moon is family memper so he will never less vijy nampiyaar to be an war criminal
Post a Comment