Monday, May 3, 2010

நாடுகடந்த தமிழீழத்தை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கின்றது. ஜீ.எல். பீரிஸ்

இலங்கைக்கு வெளியே புலிகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடுகடந்த தமிழீழ அரசினை எதிர்கொள்வதற்க அரசு தயாராகவுள்ளதாக சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தினை கையாளுவது தொடர்பாக உலகம் பூராகவும் உள்ள இலங்கையின் தூதுவர்கள் , உயரிஸ்தானிகர்களுக்கு அறிவுறுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் நாட்டில் இனவாதத்தை தூண்டும் விதத்தில் கட்டுரைகளை எழுதினார் என நீதிமன்றினால் 20 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட திஸ்ஸநாயகம் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது மேல்முறையீடு தொடர்ந்தும் விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com