Wednesday, April 21, 2010

சிறுபான்மையினரின் எதிர்காலம் - புன்னியாமீன்.

விகிதாசார முறையில் ஆளும் ஐ.ம.சு.மு. வரலாற்று வெற்றி. இனி இலங்கைச் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்து தெரிவுசெய்யப்பட்;ட பிரதிநிதிகள் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றார்கள்?

விகிதாசார முறையின் கீழ் 7ஆவது பாராளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் உத்தியோகபூர்வமாக வெளியான நிலையில் ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு 144 ஆசனங்களும், ஐ.தே. முன்னணிக்கு 60 ஆசனங்களும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 14 ஆசனங்களும், ஜனநாயக தேசிய முன்னணிக்கு 07 ஆசனங்களும் கிடைத்துள்ளன. விகிதாசார முறையின் கீழ் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சியொன்று 144 ஆசனங்களைப் பெற்றிருப்பது இதுவே முதற்தடவை.
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின்போது ஐ.ம.சு.மு. தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக வேண்டியும், அரசியலமைப்பை மாற்றியமைப்பது மற்றும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பெறுவது ஆகிய நோக்கங்களுக்காகவும் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பெரும்பான்மைப் பலத்தை மக்களிடம் வேண்டிநின்றார். விகிதாசார தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தைப் பெறுவதென்பது இலகுவான காரியமல்ல. இலங்கையில் பல கட்சிகள் காணப்பட்டபோதிலும்கூட, கடந்த கால தேர்தல் முறைகளை ஒப்புநோக்கும்போது இரு கட்சி முறைக்குரிய பண்புகளே இலங்கையில் பெருமளவிற்கு வெளிப்படுவதினால் மூன்றில் இரண்டு பலத்தைப் பெறுவதென்பது மிகவும் கடினமான ஒரு விடயமே. இருப்பினும், 144 ஆசனங்களை ஆளும் கட்சிக் கிடைத்திருப்பதென்பது ஒரு விசேடத்துவமான வெற்றி என்றே கருத வேண்டும். பாராளுமன்றத்தின் மொத்த ஆசன எண்ணிக்கை 225 ஆகும். இதில் மூன்றில் இரண்டு என்று கூறும்போது குறைந்தது 150 ஆசனங்களையாவது பெற்றாக வேண்டும்.

தற்போது ஆளும் கட்சி 144 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக வேண்டி மேலும் 06 ஆசனங்கள் தேவைப்படுகின்றன. எதிர்க்கட்சியிடமிருந்து இந்த 06 ஆசனங்களையும் பெற்றுக் கொள்வது ஆளும் கட்சிக்கு பெரிய சவாலாக அமையாது என்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். தற்போது எதிர்க்கட்சியில் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் தமது கட்சி தலைமைத்துவத்திற்கு விரோதமாக இருப்பதுடன், இவர்கள் சிலநேரங்களில் ஆளும் கட்சிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்குவார்களெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஸவால் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தை பெற்றுக் கொள்ள கணிசமான வாய்ப்புக்கள் உண்டு. இந்நிலையில் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சியில் தெரிவாகியிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் நிலைப்பாடுகள் எவ்வாறிருக்கும் என்பதையும் இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மையினர் எதிர்பார்த்துள்ளனர்.

இலங்கையில் தமிழ் மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தவர்கள். தமது இனத்தின் உரிமைக்காக ஆயிரக்கணக்கான உயிர்களை பழிகொடுத்தவர்கள். தற்போதைய நிலையை யதார்த்தபூர்வமாக சிந்திக்கும்போது வெளிநாட்டு நிகழ்ச்சித்திட்டங்களால் அல்லது கற்பனை திட்டங்களாலும் தமிழ் மக்களின் உரிமைகளையும், அபிலாஸைகளையும் வென்றெடுப்பதென்பது மிகவும் ஒரு கடினமான நிலையே. இத்தகைய நிலையில் ஆளும் கட்சியுடன் இணக்கப்பாட்டிற்கு வந்து வடக்கு கிழக்கில் அபிவிருத்தியை மற்றும் வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை வென்றெடுத்துக் கொள்வதே காலத்தின் தேவையென ஆய்வாளர்கள் கருத்து வெளியிடுகின்றனர். கடந்தகால அனுபவங்களை எடுத்துநோக்கும்போது ஐரோப்பிய நாடுகள் எத்தகைய அழுத்தங்களை கொடுத்தபோதும்கூட இலங்கை அரசு அதற்கு உட்பட்டு சென்றதை காணமுடியவில்லை.

இந்தக் காலகட்டத்தில் ஆசியா சர்வதேச அரங்கில் பலமட்டங்களிலும் உயர்வடைந்தே வந்துள்ளது. எதிர்காலத்தில் ஐ.நா.சபைக்கு கட்டுப்பட்டு ஆசிய நாடுகள் அனைத்தும் நடந்து கொள்ளும் எனவும் எதிர்பார்க்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக ஆசிய நாடுகளின் போக்குகளையும் ஆசிய நாடுகளில் ஏற்பட்டு வரக்கூடிய துரிதமான வளர்ச்சிகளையும் அவதானிக்கும்போது தமது வளையத்தின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையையொத்த ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய நாடுகள் சபையின் வீடோ அதிகாரமுள்ள சீனாää ரஸ்யா போன்ற நாடுகளுடனும் அதேநேரம்ää ஆசியாவில் துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் இந்தியாவுடனும் நெருக்கமான உறவுகளை வைத்துள்ளதை யாராலும் மறுப்பதற்கு முடியாது. இத்தகைய பின்னணியில் ஐரோப்பிய நாடுகளோ அல்லது ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களோ அன்றேல் சர்வதேச நிகழ்ச்சித்திட்டங்களோ இலங்கையில் காணப்படக்கூடிய தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பது பகற் கனவாகவே இருக்கும்.

இத்தகைய நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் தெரிவாகியுள்ள அங்கத்தவர்களுக்கு விசாலமான பணியொன்று காத்திருக்கின்றது. சுயநல நோக்கங்களைக் கருத்திற் கொள்ளாது இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இவர்கள் யதார்த்தபூர்வமாக சிந்திக்க வேண்டியதும்ää செயல்பட வேண்டியதும் மிகவும் அவசியமானதொன்றே. அரசியல் ரீதியான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் அதேநேரத்தில் கடந்தகாலங்களில் யுத்தத்தால் அழிவுற்ற வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்யும் பணியும் இவர்களின் பொறுப்புக்களில் ஒன்று என்பதை மறந்துவிடக்கூடாது.

மறுபுறமாக இலங்கையில் வாழக்கூடிய மற்றுமொரு சிறுபான்மையினமான முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதில் முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியாகக் காணப்படக்கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பாரிய பொறுப்புண்டு.
எவ்வாறாயினும் கடந்தகால அரசியல் அனுபவங்கள் தற்போது இலங்கை அரசியலில் காணப்படக்கூடிய பெரும்பான்மை சார்பு கட்சிகளின் போக்குகள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மாத்திரமல்லாமல் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள அனைத்து சிறுபான்மை பிரதிநிதிகளும் தூரதிருஸ்டி நோக்குடன் சிந்தித்து தமது இனங்களைப் பற்றியும்ää தமது இனங்களின் எதிர்காலம் பற்றியும்ää தமது சமூகத்தின் எதிர்காலம் பற்றியும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் இன்னும் ஆறாண்டுகளுக்கு ஆளும் ஐ.ம.சு.மு. பதிவியிலிருக்கப் போகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு அரசியல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமிடத்திலும் சரி ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளின் போதிலும் சரி தத்தமது சமூக நல உரிமைகளைப் பேணிக் கொள்ள வேண்டியது தெரிவுசெய்யப்பட்ட அனைத்து சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகளுக்கும் உள்ள விசாலமான பொறுப்பும், பணியுமாகும். VIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com