ஈரானுக்கு எதிரான தடை: அமெரிக்கா தீவிரம்
ஈரானுக்கு எதிராக ஐ.நா. புதிய பொருளாதார தடைகளை விரைவாக அமல்படுத்த வைப்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக ஆதரவை திரட்டுவதற்காக அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன், கடந்த வார இறுதியில் பல்வேறு உலக தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இத்தகவலை வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த அமெரிக்க பொது விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் பி.ஜே.கிரவ்லி, ஈரானுக்கு எதிரான ஐ.நா. தடையை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக அமல்படுத்திட அதிபர் பராக் ஒபாமா விரும்புவதாக கூறினார்.
இப்போதைக்கு இவ்விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளுடன் அமெரிக்கா தீவிரமாக பேசி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment