படகு மூலம் ஆட்களை கடத்திய நால்வர் கைது.
படகுகளைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களைக் கடத்திய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீன் பிடி படகுகளைப் பயன்படுத்தி குறித்த சந்தேக நபர்கள் ஆட்களைக் கடத்தியுள்ளதாக பேருவளைக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
வாழைச்சேனை ஊடாக சில காலமாக இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நபர்கள் அவுஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்டுள்ளனர். காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேக நபர் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. பெருந் தொகையான பணத்தை செலுத்தி படகு மூலம் மக்கள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அவுஸ்திரேலிய நாட்டில் தற்போது இலங்கை அகதிகளின் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை ஏற்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment