Wednesday, April 21, 2010

எரிமலை சாம்பல்: பிரான்ஸ் நாட்டவர்கள் 85,000 பேர் தவிப்பு.

ஐஸ்லாந்தில் எரிமலை ஒன்று வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் மூட்டம் காரணமாக ஐரோப்பிய வான்பாதையில் இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சென்ற உல்லாசப் பயணிகள் நாடு திரும்ப முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள்து.

குறிப்பாக இந்தியா, இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பதாகவும், சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத கவலையில் பிரான்ஸ் மக்கள் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் பொருளாதாரப் பிரச்னையாலும் அவர்கள் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் மூட்டம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து 5 நாட்களாக தமது விமானச் சேவைகளை நிறுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

விமானச் சேவைகள் யாவும் மீண்டும் மெதுவாக சேவைக்கு திரும்பியுள்ள போதும் ஆசனங்களைப் வழங்குவதில் பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளதாக விமானச் சேவை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com