விமல் வீரவன்சவிடம் 5 கோடி நஷ்டஈடு கோருகின்றார் ஜெனரல் பொன்சேகா.
ஜெனரல் பொன்சேகா தேர்தலில் தெரிவானாலும் அவர் பாராளுமன்றம் செல்ல முடியாது என நேற்று முன்தினம் மகாவலி நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். மேற்படி அவரின் கருத்து ஜெனரலின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து ஜெனரலின் அறிவுறுத்தலின் பேரில் அவரது மனைவி அனோமா பொன்சேகா விமல்வீரவன்சவிடம் 5 கோடி நஷ்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் விமல் வீரவன்சவின் சர்சைக்குரிய மேற்படி கருத்தை அவர் எவ்வித நிபந்தனைகளும் இன்றி வாபஸ் பெற்றுக்கொள்வதுடன் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளதுடன், தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment