Tuesday, April 13, 2010

அவுஸ்திரேலியா செல்லமுற்பட்ட மேலும் ஒர் படகு மாட்டிக்கொண்டது. 45 பேர் கைது.

சட்டவிரோதமான முறையில் படகுகளின் மூலம் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முற்பட்ட குழு ஒன்றை பேருவளை பொலீஸார் கைது செய்துள்ளனர். குறித்த சட்டவிரோத படகில் சுமார் 45 பேர் பயணிக்க முயற்சித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மட்டக்களப்பு பாசிக்குடா கடலிலிருந்து குறித்த படகு புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 25 நாட்களுக்கு போதுமான உணவு மற்றும் நீர் போன்றவை குறித்த படகில் சேமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானியர்களுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் அவுஸ்திரேலியா புதிய நடைமுறைகளை அறிவித்து 24 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com