பொது தேர்தலுக்காக 2000 மில்லியன் ரூபாக்கள் செலவு.
நடந்து முடிந்துள்ள பொது தேர்தலுக்காக சுமார் 2000 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கொடுப்பனவுகள் யாவும் எதிர்வரும் 15ம் திகதி முடிவடையும் போதே மேற்படி தேர்தலுக்கு செலவாகியுள்ள மொத்தச் செலவினங்கள் எவ்வளவு என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நடந்து ஜனாதிபதி தேர்தலுக்கு 1600 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ள நிலையில் பொதுத் தேர்தலுக்கான செலவினங்கள் அதிலும் அதிகமாக அமைந்துள்ளது. அதே நேரம் நாவலப்பிட்டு மற்றும் குப்புறுப்பிட்டி பிரதேசங்களில் நடாத்தப்பட்ட மீள் வாக்கெடுப்புக்களாலும் மேலதிக செலவினங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment