Wednesday, March 10, 2010

ந‌‌ளி‌னி ‌விடுதலை தொட‌ர்பான அ‌றி‌க்கையை நாளை தா‌க்க‌ல் செ‌ய்ய ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு.

ந‌‌ளி‌னி ‌விடுதலை தொட‌ர்பான ஆலோசனை குழு அ‌றி‌க்கையை த‌மிழக அரசு நாளை தா‌க்க‌ல் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது. ந‌ளி‌னி ‌விடுதலை தொட‌ர்பாக வேலூ‌ர் மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் ராஜே‌ந்‌திர‌ன் தலைமை‌யி‌லான குழு ‌சில மாத‌ங்களு‌க்கு மு‌ன்பு ஆ‌ய்வு செ‌ய்தது. அ‌ந்த அ‌றி‌க்கை இ‌ன்னு‌ம் த‌மிழக அர‌சி‌ட‌‌ம் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்பட‌வி‌‌ல்லை.

இ‌ந்நிலை‌யி‌ல் ந‌‌ளி‌னி ‌விடுதலை தொட‌ர்பான வழ‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, வேலூ‌ர் ஆ‌ட்‌சிய‌ர் தலைமை‌யி‌லான குழு அ‌றி‌க்கை த‌ற்போது தா‌ன் ‌கிடை‌த்து‌ள்ளது எ‌ன்று‌ம் அ‌றி‌க்கையை சம‌ர்‌ப்‌பி‌க்க 2 வார‌ கால‌ம் அவகா‌ச‌ம் தேவை எ‌ன்று‌ம் த‌மிழக அரசு வழ‌க்க‌றிஞ‌ர் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

ஆனா‌ல் த‌மிழக அர‌சி‌ன் கோ‌ரி‌க்கையை ‌நிராக‌ரி‌த்த உய‌ர் ‌நீ‌திம‌ன்‌ற‌ம், ந‌‌ளி‌னி ‌விடுதலை தொட‌ர்பான ஆலோசனை குழு அ‌றி‌க்கையை த‌மிழக அரசு நாளையே தா‌க்க‌ல் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று உ‌த்தர‌வி‌ட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com