Monday, March 1, 2010

தேர்தல் ஆணையாளர் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போகின்றாராம்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனது அறிவுறுத்தல்களுக்கு கீழ்படியாத ஊடகங்களுக்கு எதிராக கடந்த ஜனாதிபதி தேர்தலைப் போலல்லாது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் திஸாந்த தஸநாயக்க தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றின் கட்டளையின்படி செயற்படாத அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் அரச ஊடகங்கள் தனது கட்டுப்பாட்டுக்கு அப்பால் சென்றிருந்தாகவும், மிகவும் பொறுப்புணர்ச்சியற்றவகையில் பக்க சார்பாக அவை செயற்பட்டிருந்தாகவும் தேர்தல்கள் ஆணையாள குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணையாளரின் செயற்பாடுகள் சிறப்பாக காணப்பட்டதாக பலராலும் போற்றப்பட்டிருந்தபோதும், அண்மையில் அவரினால் வெளியிடப்பட்ட சில அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகளால் மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com